உத்தரப்பிரதேசத்தில், தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் உறவுக்காரப் பையனை கூலிப்படை வைத்து கொன்ற காவல்துறை ஆய்வாளர் தலைமறைவாகிவிட்டார்.
லக்னோவில், 14 வயதாகும் மாஸ் என்ற சிறுவன், கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டான். வேறு யாரையோ கொல்ல வந்தவர்கள் குறி தவறி சிறுவனை சுட்டுவிட்டதாக நினைத்த காவலர்கள், அவனை சுட்டவர்களை கைது செய்து விசாரித்ததில், காவல்துறை அதிகாரியாக இருக்கும் சஞ்சய் ராய் என்பவர், அச்சிறுவனை கொல்ல ரூ.2.5 லட்சம் வழங்கியதாகக் கூறினர்.
இதையடுத்து, சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறை பயிற்சிக்கு வந்த பெண் ஒருவர் மீது காவல்துறை ஆய்வாளர் ரவீந்தர் கௌர் காதல் கொண்டார். ஆனால் ரவீந்தர் கௌரின் காதலை, அப்பெண் ஏற்கவில்லை. இதனால், அவளது குடும்பத்தையே ஒழித்துக் கட்ட திட்டமிட்ட ரவீந்தர், அப்பெண்ணின் குடும்பத்துடன் நெருங்கி பழகி குடும்பத்தில் ஒருவராகியுள்ளார். பிறகு, அச்சிறுவனைக் கொல்ல கூலிப்படையை பயன்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தலைமறைவாகிவிட்ட ரவிந்தர் சிங், காவல்துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

