சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.சி. சுக்லா இன்று காலமானார்.
கடந்த மாதம் சட்டீஸ்கரில், காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லாவின் வயிற்றில் 3 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மிகவும் கவலைக்கிடமான நிலையில், கார்கோனில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சுக்லா. தீவிர சிகிச்சை பெற்று வந்த சுக்லா, இன்று மதியம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
84 வயதாகும் வித்ய சரண் சுக்லா, காங்கிரஸ் கட்சியின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். மக்களவைக்கு போட்டியிட்டு 9 முறை தேர்வு செய்யப்பட்ட சுக்லா, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மிக இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சுக்லா இடம்பெற்றிருந்தார். மேலும், அவரது வாழ்நாளில், தொலைத்தொடர்பு, உள்துறை, பாதுகாப்பு, நிதி, திட்டக்குழு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

