சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு சுடப்பட்ட பெண்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோஸாபாத் அருகே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல், அவளையும், அவளது உறவினரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 7:48 pm

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோஸாபாத் அருகே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல், அவளையும், அவளது உறவினரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளது.

துப்பாக்கிக் குண்டு காயத்துடன் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில்  இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரோஸாபாத்தில் நக்லா சிதாலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாகனத்தை மறித்த ஒரு கும்பல், அப்பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. அப்போது அதனை தடுக்க முயன்ற உறவினரை துப்பாக்கியால் சுட்ட அந்த கும்பல், பலாத்காரம் செய்துவிட்டு, அந்த பெண்ணையும் சுட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரும் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.