கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் ராமு(60). இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். தற்போது இவர், கண் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதனால் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ராமுவுக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கி உள்ளனர்.
நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து ராமு மகன் பெருமாள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளிக்கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டுப்புடவைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தகவலறிந்த கொடுங்கையூர் போலீஸார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

