சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை,பணம் கொள்ளை

கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் ராமு(60). இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். தற்போது இவர், கண் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதனால் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ராமுவுக்கு உதவியாக

Updated On :1 ஜூன் 2013, 11:19 pm

கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் ராமு(60). இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். தற்போது இவர், கண் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதனால் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ராமுவுக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கி உள்ளனர்.

நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து ராமு மகன் பெருமாள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளிக்கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டுப்புடவைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த கொடுங்கையூர் போலீஸார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.