சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொள்ளிடத்தில் கதவணைகள் கட்ட வலியுறுத்தி வாகன பேரணி: விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

காட்டுமன்னார்கோயில் ஏ.கே.மஹாலில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.வைத்தியநாதசாமி தலைமை வகித்தார். கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் காந்தன், எம்.அன்பழகன், குணவாசல் எஸ்

Updated On :2 ஜூன் 2013, 1:54 am

கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரைக்கு மேல் பகுதியில் 7 இடங்களிலும், கீழ் பகுதியில் 3 இடங்களிலும் மழை நீரை தேக்க கதவணைகள் கட்ட வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில்- கடலூர் வரை இரு சக்கர வாகன பேரணி நடத்துவது என விவசாயிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோயில் ஏ.கே.மஹாலில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.வைத்தியநாதசாமி தலைமை வகித்தார். கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் காந்தன், எம்.அன்பழகன், குணவாசல் எஸ்.கவிசந்திரன், அத்திப்பட்டு மதிவாணன், ஆயங்குடி அப்துல்வதூது, ஜே.வெங்கடாஜலபதி, கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நலிவுற்றுள்ள விவசாயத்தை காப்பாற்ற நெய்வேலி மின்சாரத்தை விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரமாக இலவசமாக வழங்க வேண்டும்; காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு தற்காலிக ஆணையமாக அமைக்கு இருப்பதால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் ஏற்படாது, எனவே நிரந்திர காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; கர்நாடக முதல்வர் கர்நாடக அணையில் நீர் நிரம்பி வழிந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் எனக்கூறுவது உச்சநீதிமன்ற தீர்ப்பையே மீறி நடக்கும் செயலாகும். எனவே கர்நாடக முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க தமிழகஅரசை கேட்டுக் கொள்வது;  வீராணம்ஏரி தூர் வாருவது, பாசன வாய்க்கால் தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை காலம் கடத்தும் சிதம்பரம் பொதுப்பணித்துறையை (கொள்ளிட வடிநில கோட்டம்) வன்மையாக கண்டிக்கிறோம், கொள்ளிடம் கீழணையும், ஸ்ரீரங்கத்தில் மேலணையும் கட்டிய ஆங்கிலேயே பொறியாளர் சர்ஆர்தர் காட்டனுக்கு அணைக்கரையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.