ஒசூரில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப்பை திருடிச் சென்ற 2 ஓட்டுநர்களை அட்கோ போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஒசூர் அருகே உள்ள கதிரேப்பள்ளி கிராமத்தில் தனியார் இரும்பு பைப் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து கேரள மாநிலத்திற்கு இரண்டு லாரிகளில் ரூ.25 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப் விற்பனைக்காக கடந்த வாரம் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இரண்டு லாரிகளும் கேரளாவிற்கு செல்லவில்லை. லாரிகளும் காணவிலலை. இது குறிóத்து லாரி உரிமையாளர் ரமேஷ் அட்கோ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து அட்கோ போலீஸார் வழக்குப் பதிந்து லாரிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இரு லாரிகளை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்த இரும்பு கம்பிகள் திருடிச் சென்றது கண்டிபிடிக்கப்படடது.
இரண்டு லாரி ஓட்டுநர்கள் பாலக்கோடு ரமேஷ்(26), பெரியாம்பட்டி பவுன்ராஜ்(28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து அட்கோ காவ்ல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

