ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள லிவ்லீன் கௌர் என்ற மாணவி, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
அதுவும் சாதாரண தோல்வி அல்ல.. இயற்பியல், கணிதம், உயிரியல் என மூன்று தாள்களிலும் அவள் தோல்வி அடைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான சிபிஎஸ்இ தேர்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து செய்முறைத் தேர்வுகளிலும், சிறப்பாக செய்து 30க்கு 30 மதிப்பெண் பெற்றுள்ள லிவ்லீன், எழுத்துத் தேர்வில், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் முறையே 2, 14, 7 மதிப்பெண்ளை மட்டுமே பெற்றுள்ளதாக தேர்வு முடிவில் உள்ளது. அதிலும், கணிதத்தில் 100க்கு 7 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த லிவ்லீன் மனுவை விசாரித்த நீதிபதி, உடனடியாக லிவ்லீன் விடைத்தாள்களை சரிபார்த்து, மதிப்பெண்களை மறு கூட்டல் செய்து ஜூன் 5ம் தேதிக்குள் நீதிமன்றதில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
லிவ்லீன் ஜுன் 7ம் தேதி ஐஐடியில் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் பெற்றுள்ளதால், அவரது மனு அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

