இமாசலப் பிரதேசம் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்தியாவின் பெருமளவிலான நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. எனவே, சீன விஷயத்தில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.
தில்லயில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முலாயம சிங் பேசியதாவது:÷ இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருகிறேன். ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. என்ன விலை கொடுத்தாவது இந்தியாவின் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சீனா விரும்புகிறது. லடாக்கிலிருந்து இப்போதைக்கு தனது ஊடுருவலை சீனா திரும்பப் பெற்றுள்ளது. அந்நாடு தொடர்பாக மத்திய அரசு தவறான கருத்தை கொண்டிருக்க கூடாது.
இமாசலப் பிரதேசம் முதல் வடக்கு கிழக்கு மாநிலங்கள் வரை பெரும்பகுதி நிலங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா திட்டமிட்டுள்ளது.சீனாவின் வரைபடத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான 7 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அருணாசலப் பிரதேச மாநிலம் தனக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அப்பகுதியினர் சீனாவுக்கு வருவதற்கு விசா பெறத் தேவையில்லையென்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை விட சீனாதான் நமது மிகப்பெரிய எதிரி. எனவே, சீனாவுக்கு எதிராக கடுமையான நிலையை இந்தியா எடுக்க வேண்டும்'' என்றார் முலாயம் சிங்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

