தமிழக உள்துறை செயலாளராக நிரஞ்சன் மாடி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால் மின் நிதி நிறுவன தலைவராக மாற்றப்பட்டுள்ளார். தற்போது மின் நிதி நிறுவன தலைவராக இருந்த கிரிஜா வைத்யநாதன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மாடி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி வருவாய்த் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை செயலாளராக இருந்த விஜயகுமார் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

