பாமகவினர் கைது தொடர்பான மாநில அரசின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடாது. சட்டம், ஒழுங்கு விஷயத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், ரயில்வே அமைச்சர் பன்சால்,ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆகவில்லை. ஆனால் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங்,ஆகியோரின் விருப்பப்படியே இந்த ராஜினாமா நடந்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றிய பிறகு வெகு விரைவில் அங்கு மின் உற்பத்தி தொடங்கும். இந்தியா, இலங்கை நாடுகளுக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தபடி கச்சத்தீவு இலங்கையிடம் ஓப்படைக்கபப்பட்டது. ஆனால் சமீப காலமாக இலங்கை அந்த ஒப்பந்தத்தை சரிவர மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவையில் கசசத் தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.
அதுபோல கச்ச தீவு விவகாரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே தமிழகத்தின் ஓட்டுமொத்த கருத்தையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் மறு பரிசீலனை செய்யும்.பா.ம.க.வினர் கைது தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடாது. மாநிலத்தின் சட்டம், ஓழுங்கு பிரச்சனை பற்றி முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு. இதில் மத்திய அரசு தலையிடமுடியாது என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

