தம்மம்பட்டி அருகே தனியார் வெடிமருந்து தொழிற்சாலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர், தொழிற்சாலைக்குரிய வேன் மீது கல்வீசியதையடுத்து அவரை போலீசார் பிடித்துவைத்து விசாரித்து வருகின்றனர்.
தம்மம்பட்டி அருகே முருங்கப்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இதில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் வேலைக்குச் சென்று வருகின்றனர். தொழிற்சாலையின் வேன் மூலம் தொழிலாளர்கள் தினந்தோறும் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தம்மம்பட்டி அருகே நேருநகர் காலனியைச் சேர்ந்த பாண்டியன்(34), அண்மையில் அந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டாராம்.
தொழிற்சாலை வேன், நேற்று இரவு தம்மம்பட்டிக்குள் வந்தபோது பாண்டியன், அந்தவேன் மீது கல் எடுத்து வீசனாராம். இதில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் பாண்டியனிடம் விசாரணை செய்துவருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

