பாகிஸ்தான் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு, ஷிண்டே உறுதி அளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இன்று சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பிர் கௌர் மற்றும் இதர குடும்ப உறவினர்களிடம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சரப்ஜித் சிங்கின் உடலைக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டால், குடும்பத்தினரின் விருப்பப்படி இறுதி சடங்குகளை செய்து கொள்ளலாம். இந்தியாவிடம் சரப்ஜித் சிங்கின் உடலை ஒப்படைப்பது பாகிஸ்தான் அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் இருக்கிறது. அதற்காக தான் காத்திருக்கிறோம் என்று ஷிண்டே கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

