சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

முகேஷ் அம்பானிக்கு சமீபத்தில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அவரது மும்பை அலுவலகம், போலீஸாரிடம் புகார் செய்தது. இதைத் தொடர்ந்து, தெற்கு மும்பையில் உள்ள அவரது பங்களா வீட்டுக்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.இந்நிலையில்

Updated On :22 ஏப்ரல் 2013, 12:21 am

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

முகேஷ் அம்பானிக்கு சமீபத்தில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அவரது மும்பை அலுவலகம், போலீஸாரிடம் புகார் செய்தது. இதைத் தொடர்ந்து, தெற்கு மும்பையில் உள்ள அவரது பங்களா வீட்டுக்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.இந்நிலையில், முகேஷ் அம்பானிக்கு பயங்கரவாத அமைப்புகளால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசின் பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்தன. அவை, அவருக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தன.

இதைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, அவருக்கு நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.அரசு சாராத தனிநபர் ஒருவருக்கு ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.