பிரதமர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அக்கட்சியில் வலுத்து வருகிறது. அதேவேளையில், மோடியை வரவிடக் கூடாது என்ற நோக்கில், பிரதமர் வேட்பாளரை விரைவில் அறிவிக்குமாறு பா.ஜ.க.வுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், சிவசேனையும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.. இவ்விவகாரம் குறித்து, அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
பிரதமர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உரிய நேரத்தில் கூடி, முடிவு செய்யும். கட்சியில் சில தலைவர்கள் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு கோருவது குறித்துக் கேட்கிறீர்கள். யாரைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது அல்லது யாரையாவது அப்படி முன்னிறுத்த வேண்டுமா என்பது குறித்து கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும். எங்கள் கட்சியில் போட்டி எதுவும் இல்லை எனக் கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

