பெண்கள் மீதான பாலியல் பலாத்கார நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தும் மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
சிறார்களுக்கான வயது வரம்பு 18 ஆகவே இச்சட்ட மசோதாவில் நீடிக்கிறது. மேலும், பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க இந்த சட்ட திருத்த மசோதா வகை செய்கிறது. பெண்களுக்கான பாலியல் உறவு சம்மத வயது 18 ஆகவே நீடிக்கிறது. இதில் திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை.
இதனை மாநிலங்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கொண்டு வந்தார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் போது, மாநிலங்களவையில் பிரதமரும் இருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மாணவி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து கொண்டு வரப்பட்ட இந்த சட்ட திருத்த மசோதா 2 நாட்களுக்கு முன்பு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

