உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அனைத்துக் கட்சிகளுக்கும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்ற சில வார்டுகளை மட்டுமே இழந்துள்ளது. மற்றபடி பாஜகவின் செல்வாக்கு எந்த வகையிலும் குறைய வில்லை என்பதனை நாங்கள் பெற்றுள்ள வார்டுகளின் எண்ணிக்கை நிரூபித்துள்ளன. இது சட்டபேரவைக்கான எச்சரிக்கை மணியாகவே பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த வளர்ச்சிப்பணிகளை பாராட்டியே மக்கள் எங்களை ஆதரித்து வாக்களித்துள்ளனர். ஆனால் சில சதம் வாக்குகளை நாங்கள் இழந்துள்ளதற்கு எங்கள் உட்கட்சி பூசலும் ஒரு காரணம். பல்வேறு பிரச்னைகளை அடுக்கடுக்காக சந்தித்த கட்சி இந்தளவிற்கு வார்டுகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது பெரும் சாதனையாகவே கருதுகிறேன். இதனை வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் நாங்கள் சரி செய்து கொண்டு கர்நாடகத்தில் பெரும் சக்தியாக திகழ்வோம். சுயேச்சைகள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

