சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோவையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்றவர் கைது

கோவை துடியலூரை அடுத்த பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வீராச்சாமி(46) என்பவர் கோவை மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு பிரிவில் அதிகரியாக பணியாற்றுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் இவரை தொடர்பு கொண்ட நபர் தன்

Updated On :1 மார்ச் 2013, 9:41 pm

கோவை துடியலூரை அடுத்த பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வீராச்சாமி(46) என்பவர் கோவை மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு பிரிவில் அதிகரியாக பணியாற்றுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் இவரை தொடர்பு கொண்ட நபர் தன் பெயர் சரவணக்குமார் மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரி என்றும், நீங்கள் லஞ்சம் வாங்கி வீடு கட்டி வருவருவதால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 லட்சம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.சந்தேகம் அடைந்த வீராசாமி கோவை மின்வாரிய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.அதற்கு அவர்கள் தங்கள் அலுவலுகத்தில் அப்படி யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

உஷாரான வீராச்சாமி சரவணக்குமாரை பிடிக்க முடிவு செய்து தான் பணத்தை தயார் செய்துவிட்டதாக சரவணக்குமாரிடம் கூறினார்.உடனே சரவணக்குமார் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு வீராச்சாமியை வரச்சொன்னார்.பின்னர் வீராச்சாமி பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சரவணக்குமாரை பிடித்தனர். விசாரணையில் சரவணக்குமார் லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்தது தெரிய வந்தது.