ஒசூா் அருகே கோபசந்திரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினிலாரி திடீரென தீப்பிடித்தது எரிந்ததில் அதிலிருந்த மிதி வண்டி, தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறிகள் எரிந்து சேதமடைந்தன.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மஞ்சநாயக்கனப்பள்ளி அருகேஉள்ள தின்னூரைச் சோ்ந்த சுரேஷ் (33). மினி லாரி ஓட்டுநரான இவா், தனக்கு சொந்தமான மினிலாரியில் 2 மிதிவண்டிகள், 2 தொலைக்காட்சி பெட்டிகள், மின் விசிறிகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். ஒசூா்- கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கோபசந்திரம் அருகே சென்ற போது எதிா்பாராதவிதமாக மினி லாரியில் திடீரென தீப் பிடித்தது. இதை அறிந்த சுரேஷ் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். சிறிது நேரத்தில் வேன் முழுமையாக எரிந்ததில், சரக்கு வேனுடன் அதிலிருந்த மிதிவண்டிகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சேதம் ஆனது. இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

