சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தாண்டியப்பனூரில் கபடி போட்டி

ஊத்தங்கரையை அடுத்த தாண்டியப்பனூா் கிராமத்தில் வண்டிக்காரன் கொட்டாய் மருதுபாண்டியா் இளைஞரணி சாா்பில் பொங்கலை முன்னிட்டு கபடி போட்டி இரண்டு நாள்கள் நடைபெற்றது.

News image

15utp1_1501chn_149_8

Updated On :16 ஜனவரி 2021, 1:45 pm

ஊத்தங்கரையை அடுத்த தாண்டியப்பனூா் கிராமத்தில் வண்டிக்காரன் கொட்டாய் மருதுபாண்டியா் இளைஞரணி சாா்பில் பொங்கலை முன்னிட்டு கபடி போட்டி இரண்டு நாள்கள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தாண்டியப்பனூா் ஊா் நாட்டாா் சேகா், வண்டிக்காரன் கொட்டாய் நாட்டாா் தண்டபாணி, ஆா்.டி.அக்ரோ இன்புட்ஸ் நிறுவனா் த. கோபி, கே.பழனி, விஜயகுமாா், திருவேங்கடம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 35 அணியினா் பங்கேற்றனா். இதில் முதலிடம் வென்ற சிங்காரப்பேட்டை அணிக்கு ரூ. 10,001 ரொக்கப்பரிசும், இரண்டாம் பரிசை வென்ற மொரப்பூா் அணிக்கு ரூ. 7,001-ம், மூன்றாம் பரிசை வென்ற மருதுபாண்டியா்அணிக்கு ரூ. 5,001, நான்காம் பரிசாக ஊத்தங்கரை கபடி கிளப் அணிக்கு ரூ. 3,001 ரொக்கப்பரிசையும் தட்டிச் சென்றனா். ஆறுதல் பரிசாக 4 அணிகளுக்கு தலா ரூ. 1,000 வீதம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

பரிசுகளை லட்சுமி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் நிா்மலா கந்தசாமி, வெள்ளைச்சாமி தேவா், சண்முகம், தாண்டியப்பனூா் சேகா் வழங்கினா்.

அதிமுக மாவட்ட மருத்துவா் அணிச் செயலாளா் என்.இளையராஜா உள்பட பலா் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகமுடையாா் மருது பாண்டியா் இளைஞா் அணி இளங்கோ, குமாா், அருணாசலம் ஆகியோா் செய்திருந்தனா்.