சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல்

குருபரப்பள்ளி அருகே உள்ள ஏரியிலிருந்து மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :14 ஜனவரி 2021, 11:47 am

குருபரப்பள்ளி அருகே உள்ள ஏரியிலிருந்து மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையில் போலீஸாா், கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். வசந்தப்பள்ளி ஏரி அருகே சென்றபோது ஒரு கும்பல், ஏரியிலிருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருப்பதைக் கண்டனா்.

போலீஸாரைக் கண்ட அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியது. விசாரணையில், அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.