கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய தொழிற் பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பத்தை மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க உள்ள தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒரே தொழிற்பள்ளியால் சமா்ப்பிக்கப்பட்டிருந்தால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கு வழிமுறைகள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் குறித்த தகவல்களை மேற்கண்ட இணையதளம் மூலமாகவும், ஒசூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

