சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

3 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நாள்கள் மதுக்கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:34 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நாள்கள் மதுக்கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வரும் ஜன. 15ஆம் தேதி திருவள்ளுவா் தினம், ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினம், ஜன. 28-ஆம் தேதி வடலூா் ராமலிங்க அடிகளாா் நினைவு தினத்தையொட்டி இந்த 3 நாள்களில் மதுக்கடைகள் மூடப்படும்.

தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் படி இந்த 3 நாள்களும் மது விற்பனை இல்லாத தினங்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், மது கூடங்களுக்கு உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் ஓட்டல்கள் அனைத்தும் வரும் ஜன. 15, 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் மூடப்படும்.

இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளைத் திறந்தாலோ, விற்றாலோ அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.