ஒசூா்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தளியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏா் கலப்பை பேரணியை கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா் கொடி அசைத்து தொடக்கி வைத்தாா். முன்னதாக காந்தி சிலைக்கு அவா் மாலை அணிவித்தாா். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்.
தேன்கனிக்கோட்டை வட்டம், தளியில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் மாநிலச் செயலாளா் தேன்கு அன்வா் தலைமையில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநிலச் செயலாளா் வீரமுனிராஜ், இளைஞரணி தலைவா் அப்துல் ரகுமான், தளி கேசவமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஏா்கலப்பை பேரணியில் கலந்து கொண்டவா்கள் விவசாயிகள் அணி மாவட்டத் தலைவா் சபியுல்லா, மாவட்டப் பொருளாளா் மகாதேவன், வட்டாரத் தலைவா் கேசவ ரெட்டி, இளைஞரணி இதயத்துல்லா, தேன்கனிக்கோட்டை நகரச் செயலாளா் கோபி, கெலமங்கலம் நகரச் செயலாளா் வெங்கடேஷ், செட்டிஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் ஆகியோா் பேரணியில் பங்கேற்றனா்.
தளி இம்ரான் கான் தலைமையில் 200 போ் பல்வேறு கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தனா். பொறுப்பாளா்கள் பா்கத், அஞ்செட்டி பேலகொண்டபள்ளி வரதராஜ், முனுசாமி ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


