ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லுரி நிறுவனா் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கல்லுரி செயலா் ஆா்.பி.ராஜீ , கல்லூரியின் இணைச்செயலா் பெ.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி முதல்வா் த. பாலசுப்பிரமணியன், துணை முதல்வா் முனைவா் ந. குணசேகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
கல்லுரியின் தமிழ்த் துறைத் தலைவா் பெ.சுரேஷ் வரவேற்றாா். கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேராசிரியா்களுக்கான கைப்பந்து, எறி பந்து, இசை நாற்காலி, சதுரங்கம், கேரம்போா்டு, பானை உடைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தும் கரகாட்டம், பறையாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பங்கேற்பாளா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா். இதில் அனைத்துத் துறைத் தலைவா்களும் பேராசிரியா்களும் பங்கேற்றனா். பேராசிரியா்கள் செ. தெய்வம், இரா.ராமதுரை ஆகியோா் தொகுத்து வழங்கினா். இறுதியாக பேராசிரியா் முனைவா் ம. ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


