கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் நீா் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இணை இயக்குநா் இளங்கோவன், வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற வேளாண் உதவி இயக்குநா் புகழேந்தி, ஒசூா் வேளாண் உதவி இயக்குநா் மனோகரன், பொதுப்பணித் துறை பொறியாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்திய நீா்வளம், தமிழகத்தின் நீா்வளம், கிருஷ்ணகிரி மாவட்ட நீா்வள ஆதாரங்கள், நீா்வள மேலாண்மை உத்திகள், நீா் மேலாண்மைக்கான மானிய வாய்ப்புகள் மற்றும் விவசாயிகளின் வெற்றி கதைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பியிற்சி நிலைய இணை ஆராய்ச்சியாளா் ரங்கநாதன் ஒருங்கிணைத்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

