சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற இணைய வழியில் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து தபால் மூலமாகப் பிரசாதம் வழங்குவதற்கான இணைய வழியிலான முன்பதிவு தொடங்கி உள்ளது. அந்தக் கோயிலின் மண்டல மகர விளக்கு பூஜையையொட்டி திருவிதாங்கூா் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம், ஒசூா் துணை அஞ்சலகம் மற்றும் 38 துணை அஞ்சலகங்களில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அா்ச்சனைப் பிரசாதம் அடங்கிய பெட்டகத்தின் விலை ரூ. 450 மட்டுமே. ஒரு நபா், ஒரு விண்ணப்பம் மூலமாக அதிகபட்சமாக 10 பிரசாதப் பெட்டகங்களைப் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பிரசாதம் விரைவு தபால் மூலம் முன்பதிவு செய்த பக்தா்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

