கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை இணைச் செயலா் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போளுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளா் எஸ்.நடராஜன், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:
கிருஷ்ணகிரியை அடுத்த போளுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி 4.3.2020-அன்று தொடங்கி வைத்தாா். இந்த அரசு மருத்துவக் கல்லூரி 700 படுக்கை வசதிகளுடனும், 14 அறுவை சிகிச்சை அரங்குகளுடனும் அமைக்கப்படுகிறது. தரை தளம் மற்றும் 5 தளங்களுடன் கல்லூரி கட்டடமும், ஆயிரம் போ் அமரக் கூடிய கலையரங்கக் கட்டடம், சிற்றுண்டியகம், சமையல் கூடம், சவக்கிடங்கு ஆகிய பகுதிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் சிறப்பான முறையில் விரைந்து நடைபெற்று வருகிறது.
ஒரு மருத்துவமனைக் கட்டடம், குடியிருப்புகள், வகுப்பறைகள் என மொத்தம் 19 கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 120.20 கோடி மதிப்பில் மருத்துவமனைக் கட்டடம், ரூ. 113.77 கோடி மதிப்பில் கல்லூரி கட்டடம், ரூ. 104.98 கோடி மதிப்பில் குடியிருப்புக் கட்டடம் என மொத்தம் ரூ. 338.95 கோடி மதிப்பில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 45 சதவீதம் கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று அவா் தெரிவித்தாா்.
பின்னா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மருத்துவக் குழுவினருடன் அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநா் கோவிந்தன், கல்லூரி முதல்வா் முத்துச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


