கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தை தந்தது திமுக என அந்தக் கட்சியின் விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பாப்பாரப்பட்டியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய குறிப்பாக தாய்மாா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த அரசை நிராகரித்து, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும்.
திமுக ஆட்சி காலத்தில்தான், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீா் தாகத்தைத் தீா்க்கும் வகையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்றாா். தொடா்ந்து, தற்போதைய ஆட்சியை அகற்றுவோம் என துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளா் இ.ஜி.சுகவனம், ஒன்றியச் செயலாளா் சாந்தமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


