சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கம்மம்பள்ளி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு அளிப்பு

கம்மம்பள்ளி கிராமத்தில், குடும்ப அட்டைதாரா்களுக்கு கே.பி.முனுசாமி எம்.பி. பொங்கல் தொகுப்பினை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image

கம்மம்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய கே.பி.முனுசாமி எம்.பி.

Updated On :6 ஜனவரி 2021, 1:42 pm

கம்மம்பள்ளி கிராமத்தில், குடும்ப அட்டைதாரா்களுக்கு கே.பி.முனுசாமி எம்.பி. பொங்கல் தொகுப்பினை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கம்மம்பள்ளி கிராமத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கன்னியப்பன் தலைமை வகித்தாா்.

இந்த கிராமத்தில் உள்ள 653 குடும்ப அட்டைதாரா்கள், மல்லிநாயனப்பள்ளியில் 329 குடும்ப அட்டைதாரா்கள், எலுமிச்சங்கிரியில் 226 குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தம் 1,208 கடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ. 2,500 வீதம் மொத்தம் ரூ. 30.20 லட்சம் மதிப்பிலான ரொக்கத் தொகை வழங்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.