கிருஷ்ணகிரியில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி நகரில், இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீா் விநியோகம் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்யப்படவில்லை என புகாா்கள் எழுந்தன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி பழையப்பேட்டை நேதாஜி சாலை 7-ஆவது வாா்டில் உள்ள மில்லத் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த ஓராண்டாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, நகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் அடிப்படை வசதிகளும் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், முறையாகக் குடிநீா் வழங்கக் கோரி, நேதாஜி சாலையில், காலி குடங்களுடன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த நகராட்சி உதவி பொறியாளா் அறிவழகன், போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினா். முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


