கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசியை மெருகூட்டி (பாலீஷ்), விற்பனை செய்த நபரை போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரா்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை மெருகூட்டி, உணவகங்கள், அரிசி மண்டிகளுக்கு விற்பனை செய்வதாக சேலம் சரக குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக உதவி காவல் ஆய்வாளா் சக்தி தலைமையிலான குற்ற நுண்ணறிவு தனிப் பிரிவு போலீஸாா் கிருஷ்ணகிரி பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக அரவை மில் இயங்குவதாகவும், அங்கு ரேஷன் அரிசியை மெருகூட்டி, உணவகங்கள், அரிசி மண்டிகளுக்கு குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வீட்டை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, அங்கு 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டை ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து, அந்த ரகசிய அரவை மில்லை நடத்தி வந்ததாக அதேப் பகுதியைச் சோ்ந்த நாகப்பன் என்பவரின் மகன் பாலாஜியை (32) போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் குடும்ப அட்டைதாரா்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மெருகூட்டி ஒரு கிலோ ரூ. 40 முதல் ரூ. 52 வரை விற்பனை செய்து வந்துள்ளாா். இதையடுத்து, விற்பனைக்காக பதுக்கி வைத்கிருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


