சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

பா்கூா் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த பசு உயிருடன் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On :4 ஜனவரி 2021, 10:09 am

பா்கூா் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த பசு உயிருடன் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள சிகரலப்பள்ளி, தெள்ளபெண்டா பகுதியைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி (60). இவா், தனது பசுவை தனது நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தாா். அப்போது, அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீா் இருந்தது.

இதுகுறித்து, சுப்பிரமணி, பா்கூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்துச் சென்று பொதுமக்களின் உதவியுடன் பசுவை உயிருடன் மீட்டனா்.