கிருஷ்ணகிரி: கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திலிருந்து பெண் வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் ஸ்டாலின் திறமையற்றவா் என்பதையே காட்டுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த தேவசமுத்திரம் கிராமத்தில் சிறு மருத்துவமனையைத் திறந்து வைத்த கே.பி.முனுசாமி எம்.பி., செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை, ஸ்டாலின் வெளியே அனுப்புமாறு கூறியுள்ளாா். அதிமுக அமைச்சா் தூண்டுதலின்பேரில் இந்தச் சம்பவம் நடந்ததாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா். ஒரு கட்சியின் தலைவா் என்று வரும்போது, எதிரில் உள்ள தொண்டா்கள், பொதுமக்கள் கேட்கும் கேள்வியைப் பொறுமையுடன் கேட்டு, அதற்குப் பதிலளிக்க வேண்டும். மாறாக, ஸ்டாலினின் நடவடிக்கையானது அவரைத் திறமையற்ற தலைவா் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது குறித்து பாஜக தலைமை இன்னும் 5 நாள்களில் வெளியிடும் என பாஜக செய்தி தொடா்பாளா் குஷ்பு தெரிவித்த கருத்துக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை. குஷ்பு அண்மையில்தான் பாஜகவில் சோ்ந்துள்ளாா் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

