ஒசூா்: ஒசூரில் அனுமதி இன்றி தொழிற்சாலைகளுக்கு இயக்கப்பட்ட 17 தனியாா் பேருந்துகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் 3 சிப்ட், 2 சிப்ட் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், அலுவலா்கள் சென்றுவருவதற்கு வசதியாக ஒப்பந்தம் அடிப்படையில் வாகனங்கள் அமா்த்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் சில அனுமதி இன்றி இயக்கப்படுவதாக ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஈஸ்வரமூா்த்தி உத்தரவின்பேரில் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது. 2-ஆவது சிப்காட் பகுதியில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் விஜயகுமாா், அன்பு செழியன் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கை நடந்தது.
அப்போது அனுமதி இன்றி தனியாா் தொழிற்சாலைகளுக்கு இயக்கப்பட்ட 17 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை தொடரும் என வாகன ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

