சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மழை வேண்டி நூதன வழிபாடு

கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி, வியாழக்கிழமை நள்ளிரவில் ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன வழிபாடு நடத்தினர்.

Updated On :11 மே 2013, 6:02 pm

கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி, வியாழக்கிழமை நள்ளிரவில் ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன வழிபாடு நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் கடும் வறட்சி நிலவுவதால் ஏரிகள், குளங்கள் வறண்டுள்ளன. இதனால், மழை வேண்டி பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகளும், கோயில்களில் வருண யாகமும் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியகோட்டப்பள்ளி ஊராட்சி, போத்திநாயனப்பள்ளி கிராம மக்கள் மழை வேண்டி நூதன வழிபாடு நடத்தினர். அங்குள்ள வறண்ட ஏரியில் திரண்ட கிராம மக்கள் நள்ளிரவில் வருண பகவனுக்கு பூஜை செய்தும், அம்மனுக்கு கூழ் ஊற்றியும் வழிபட்டனர்.

பின்னர், பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதபடி, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அம்மனை வழிபட்டனர்.