போரில் உயிர் நீத்த படைவீரர்களின் சார்ந்தோர், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் கருணைத் தொகை பெற வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மு.முத்துராம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போரில் உயிர் நீத்த படைவீரர்களின் விதவையர், பெற்றோர் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தமிழக அரசின் கருணைத் தொகை, தொகுப்பு நிதியிலிருந்து கருணைத் தொகை, வருடாந்திர பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியுதவியைப் பெற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி படைத்தவர்கள் இதுவரை பெறாதிருப்பின் தற்போது பெற அனைத்து ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை மார்ச் 31-க்குள் அணுகி விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் அந்த அவகாசம் வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

