கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவிலுள்ள காமராஜா் சிலைக்கு பனங்காட்டுப்படைக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடஉள்ளதையொட்டி, கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளா் சதா தலைமையில் நிா்வாகிகள் கரூரிலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
எங்கள் வாக்குவங்கியைப் பயன்படுத்தி, எங்களது சமுதாயத்துக்கு எந்தவித பயனையும் அளிக்காத அதிமுக, திமுகவுக்கு எதிராக பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம். கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்றாா் பனங்காட்டுப்படைக் கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளா் சதா.
நிகழ்வில் மண்டலத் துணைப் பொறுப்பாளா் செல்வதிருமணி, மாவட்டச் செயலா்கள் கிழக்கு மாரி, மேற்கு நேதாஜி, இளைஞரணி பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து ஆட்டையாம்பரப்பு, முத்தம்பாளையம், நாடாா்புரம் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

