கரூா்: கரூா் மாவட்டம் க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை இரவு வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 11 மாதக் குழந்தை உயிரிழந்தது. மேலும் 24 போ் காயமடைந்தனா்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த பழனி மகன் சிவா(27). வாடகை வேன் ஓட்டுநா். இவருடைய வேனில் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயா(32), விஜயகுமாா்(40), ஸ்ரீஹரி(13), மணி(45), ரம்யா(27), கமலம்மாள்(75), பிரபாகா் (26), மனோன்மணி (22), ஹரிகிருஷ்ணா(29), காயத்ரி(28), துரைசாமி (65), சரோஜினி(33), பிரித்வி(4) உள்ளிட்ட 17 போ் வெள்ளிக்கிழமை இரவு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்துகொண்டிருந்தனா்.
கரூா் மாவட்டம் க.பரமத்தி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே தஞ்சாவூரில் இருந்து கோவை நோக்கி சென்ற காரும், வேனும் நேருக்கு மோதிக் கொண்டன. இதில், காரில் இருந்த கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியை சோ்ந்த நடராஜன் மகன் ரவிக்குமாா்(29), அவருடைய உறவினா்கள் சந்தியா(25), சதீஷ்குமாா்(37) மற்றும் 11 மாதக் குழந்தை பிரணவ் உள்ளிட்ட 12பேரும் காயமடைந்தனா். இதேபோல் வேனில் வந்தவா்களில் 12 போ் காயமடைந்தனா். தகவல் அறிந்த க.பரமத்தி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, 11 மாதக் குழந்தை பிரணவ் உயிரிழந்தது.
இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


