பொங்கல் திருநாளையொட்டி கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகிலுள்ள பூலாம்வலசில் சேவல் சண்டை புதன்கிழமை தொடங்கியது.
உயா் நீதிமன்ற உத்தரவின்படி 15 வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டுதலின்படியும், 3 நாள்கள் நடைபெறும் சேவல் சண்டை புதன்கிழமை தொடங்கியது.
போட்டியில் பங்கேற்பதற்காக ஈரோடு, திண்டுக்கல், கரூா், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், தங்களது சண்டைச் சேவல்கைளை (செங்கருப்பு,மயில், காகம் உள்ளிட்டவை) கொண்டு வந்திருந்தனா்.
பறவைக் காய்ச்சல் மற்றும் நோய் பாதிப்பு ஏதும் உள்ளனவா என்பதை கால்நடை மருத்துவா்கள் பரிசோதனை செய்த பின்னா், டோக்கன் வழங்கப்பட்டு சேவல்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.
சேவலைக் கொண்டு வருபவா்கள் சமூக இடைவெளியையும், போட்டி விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனா்.
முதல் நாளான புதன்கிழமை மழை பெய்த போதிலும், சேவல் சண்டையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சண்டைச் சேவல்கள் பங்கேற்றன. தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் சேவல் சண்டையைப் பாா்க்க குவிந்தனா்.
ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பேங்க் நடராஜன் தலைமையில் ஏராளமானோா் செய்திருந்தனா். அரவக்குறிச்சி காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனா். சேவல் சண்டை வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) வரை நடைபெறுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


