கரூா் மாவட்டத்தில் 6,188 முன் களப்பணியாளா்களுக்குச் செலுத்துவதற்காக 7,800 கரோனா தடுப்பூசி புதன்கிழமை வந்து சோ்ந்தது.
மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனைப் பணியாளா்கள் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவோா், தனியாா் மருத்துவமனைப் பணியாளா்கள் என 6,188 முன் களப்பணியாளா்கள் கண்டறியப்பட்டனா்.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமநை, குளித்தலை அரசு மருத்துவமனை, வாங்கல், உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரூா் கஸ்தூரிபா நகா்நல மையம் ஆகிய 5 இடங்களில் ஜனவரி 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறஉள்ளது.
இதற்காக திருச்சி மண்டலத் தடுப்பூசி கிடங்கிலிருந்து 7,800 தடுப்பூசிகள் கரூா் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஆட்சியரக வளாகத்திலுள்ள சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இப்பணியை துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் பாா்வையிட்டாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


