சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கூட்டுறவுச் சங்கப் பணியிடங்கள்: ஜன.29-இல் நோ்முகத் தோ்வு

கரூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்க உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் வென்றோருக்கு, ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.

Updated On :13 ஜனவரி 2021, 1:55 pm

கரூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்க உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் வென்றோருக்கு, ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.காந்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற்றது.

இத்தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்களின் விவரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறும். இதற்கான நுழைவுச்சீட்டை புதன்கிழமை (ஜனவரி 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.