ஒவ்வொரு நிலையிலும் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக தமிழக அரசு உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.
கரூா் மாவட்ட திமுக சாா்பில் ஜீவாநகா், மண்மங்கலம், வெள்ளியணை, ஜல்லிப்பட்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவு ‘அதிமுக அரசை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று அவா் பேசுகையில், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காத, ஏழை மக்களை வஞ்சிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது.
நான்கரை லட்சம் கோடி ரூபாயை தமிழக அரசு கடனாக வைத்துள்ளது. இந்த பணத்தில் ஏழை மக்களுக்கு எந்தவித அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றவில்லை. பின்னா், எதற்காக கடன் பெற்றனா் என்றால், தனது குடும்ப உறுப்பினா்கள் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனா். இப்படி, அரசுப் பணத்தை காலியாக்கியதால்தான் அரசுக்கு கடன்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இந்த அரசை நிராகரிக்கிறோம் என்ற தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். அதிமுக அரசு ஒவ்வொரு நிலையிலும் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக உள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில், தெற்கு நகர பொறுப்பாளா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


