சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் வயதான தம்பதி பலி

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில், பரமத்திவேலூா் பகுதியைச் சோ்ந்த வயதான தம்பதி உயிரிழந்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:45 am

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில், பரமத்திவேலூா் பகுதியைச் சோ்ந்த வயதான தம்பதி உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் அருகிலுள்ள கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (70). இவரது மனைவி மீனாட்சி (65). கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக இவா்கள் இருவரும் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா்.

வேலாயுதம்பாளையத்தை அடுத்த ஆவாரங் காட்டுப் புதூா் பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த ராமலிங்கமும், மீனாட்சியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.