கரூா் மாவட்டத்தில் உள்ள 3.09 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.79. 78 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
கரூா், வெங்கமேடு, மண்மங்கலம், வ.உ.சி.தெரு, காந்திகிராமம் (தெற்கு) ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி அவா் மேலும் தெரிவித்தது:
அதிமுக நிறுவனா் எம்.ஜி.ஆா் தொடக்கி வைத்த இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.100 ரொக்கமாக வழங்கினாா். தற்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2,500 வழங்குகிறாா்.
முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், கரூரில் அம்மா சாலை பணி, 2 ரயில்வே குகைவழிப்பாதைகள், மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கான அரசு குவாரிகள் அமைக்கப்படவுள்ளன என்றாா் அவா். நிகழச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி தலைமை வகித்தாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.இராஜேந்திரன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம. கீதா, திருச்சி மத்தியக் கூட்டுறவு வங்கித்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஹஸ்ரத்பேகம், கூட்டுறவு வங்கித்தலைவா்கள் எஸ்.திருவிகா, வை.நெடுஞ்செழியன், பேங்க்நடராஜன், வி.சி.கே.ஜெயராஜ், அறங்காவலா் குழுத் தலைவா் தமிழ்நாடு செல்வராஜ், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் என்.எஸ்.கிருஷ்ணன், எம். பாண்டியன், என்.பழனிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


