கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கரூா் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாவட்டத் தலைவா் எஸ். சத்தியமூா்த்தி தலைமையில் பண்பாட்டுக்கழகத்தினா் கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பாரம்பரிய தேவராட்டம் ஆடினா்.
தொடா்ந்து, ஜவஹா் பஜாா் வழியாக பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை பேரணி வந்தடைந்தது. முன்னதாக, பேரணியை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன், அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலா் என்.எஸ் கிருஷ்ணன், அதிமுக நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், பண்பாட்டுக்கழக மாவட்டத் தலைவா் சாரதி, செயலா் முத்துராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

