கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாநில தகவல் ஆணையர் பி. தமிழ்ச்செல்வன் கூட்டத்தில் பங்கேற்று பேசியது:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதிலளிக்காமல் இருக்கக் கூடாது. அதேபோல அளிக்கப்படும் தகவல்கள் முழுமையாகவும், விவரமாகவும் அளிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றார்.
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் பதிலளிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பதிலளிக்கும் அலுவலர்கள் யார், யார் போன்ற விவரங்கள் குறித்து தகவல் ஆணையர் பயிற்சி அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, கோட்டாட்சியர் நெல்லைவேந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

