சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாநில தகவல் ஆணையர் கரூரில் ஆய்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:20 pm

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநில தகவல் ஆணையர் பி. தமிழ்ச்செல்வன் கூட்டத்தில் பங்கேற்று பேசியது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதிலளிக்காமல் இருக்கக் கூடாது. அதேபோல அளிக்கப்படும் தகவல்கள் முழுமையாகவும், விவரமாகவும் அளிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றார்.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் பதிலளிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பதிலளிக்கும் அலுவலர்கள் யார், யார் போன்ற விவரங்கள் குறித்து தகவல் ஆணையர் பயிற்சி அளித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, கோட்டாட்சியர் நெல்லைவேந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.