மத்தியபிரதேச மாநிலம், தேவாஸ் நகரில் நடைபெற உள்ள தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்க கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2013-14-ம் ஆண்டின் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் தேர்வு போட்டி இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமத்தால் சேலம் உருக்காலை வளாக மைதானத்தில் கடந்த 19-ம் தேதி நடத்தப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் கரூர் காக்காவாடி பி.ஏ.வித்யாபவன் பள்ளி பிளஸ் 1 மாணவர் டி.ஏ. அருள் சபரீஸ்வரன் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
இதன் மூலம் அக்டோபர் 1-ம் தேதி தேவாஸ் நகரில் நடைபெறும் தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டிக்குத் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார்.
தேர்வு பெற்ற மாணவரையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் பி. அம்மையப்பன், துணைத் தலைவர் பி. கணேசன், கௌரவ கல்வி ஆலோசகர் வி. சீனிவாசன், தலைமையாசிரியர் டி. பிரகாசம் ஆகியோர் பாராட்டினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

