பல்வேறு போலி திட்டங்களை நம்பி தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், அவ்வாறு செய்யும் முன் மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரித்து முதலீடு செய்ய வேண்டும் எனவும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கரூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கரூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள், அதிக வட்டித் தருவதாக சொல்லும் போலி நிதி நிறுவனங்கள், ஈமு கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு, கொப்பரைத் தேங்காய் திட்டம் என்ற பெயரிலும், வேறு வழிகளிலும் லாபம் கிடைக்கும் என்று நம்பியும் இவற்றில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.
தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாயமாக ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்திருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வைப்புத்தொகை வாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனியார் நிதி நிறுவனங்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் முதிர்வு காலத்துக்கு மட்டுமே வைப்புத் தொகையை பெற முடியும்.
இந்த நிறுவனங்கள் அதிகபட்சம் 12.5% மட்டுமே வட்டி அளிக்க முடியும். இத்தகைய நிதி நிறுவனங்கள் வைப்புத்தொகையை பெறுவதற்கு பரிசு, ஊக்கத்தொகை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் விசாரித்து முதலீடு செய்ய வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

