குளித்தலையில் புகைப்பட கலைஞரின் வீட்டுப் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் பொருள்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன் மகன் விஜய்ஆனந்த் (40). புகைப்பட கலைஞரான இவர், இரண்டு நாள்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு பொன்னமராவதிக்கு குடும்பத்துடன் சென்றார்.
புதன்கிழமை காலை அவர் தனது வீட்டுக்கு வந்த போது, வீட்டு முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டினுள் இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் உள்ள பொருள்கள் சிதறிக்கிடந்தனவாம்.
இதுகுறித்து குளித்தலை போலீஸாருக்கு விஜய்ஆனந்த் தகவல் அளித்தார். இதையடுத்து, போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த தங்க நகைகள், ரூ. 2 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள பொருள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

