சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆக. 24-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் ஆகஸ்ட் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:21 pm

கரூரில் ஆகஸ்ட் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆர். துரைராஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 24 (சனிக்கிழமை) கரூர் கௌரிபுரம் விரிவாக்கப்பகுதியிலுள்ள ரோட்டரி சங்க சமுதாயக் கூடத்தில் நடைபெறவுள்ளது.

எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரி வரை படித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பயோ டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு காலை 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும்.

முகாமில் பங்கேற்று பயன்பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.