கரூரில் ஆகஸ்ட் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆர். துரைராஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 24 (சனிக்கிழமை) கரூர் கௌரிபுரம் விரிவாக்கப்பகுதியிலுள்ள ரோட்டரி சங்க சமுதாயக் கூடத்தில் நடைபெறவுள்ளது.
எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரி வரை படித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பயோ டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு காலை 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும்.
முகாமில் பங்கேற்று பயன்பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

